இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வு
Published on

புதுடெல்லி,

உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா பரவல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 640 ஆக நேற்று அதிகரித்தது. 3,870 பேர் குணமடைந்தும், 15,474 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது. 4,258 பேர் குணமடைந்தும், 16,454 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வடைந்து உள்ளது.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 269 பேர் பலியாகி உள்ளனர். 789 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com