கேரளாவில் செப்டம்பர் 1ல் இருந்து 3 ஆயிரத்திற்கும் கூடுதலான கொரோனா உயிரிழப்புகள்

கேரளாவில் செப்டம்பர் 1ந்தேதியில் இருந்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் கூடுதலான கொரோனா உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
கேரளாவில் செப்டம்பர் 1ல் இருந்து 3 ஆயிரத்திற்கும் கூடுதலான கொரோனா உயிரிழப்புகள்
Published on

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும், சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இந்த நிலையில், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.

இந்த சூழலில், கேரள சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,682 பேருக்கு புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

20,510 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 43,94,476 ஆக உயர்ந்து உள்ளது. 1,60,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 152 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 24,191 ஆக உயர்வடைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com