கொரோனா: கோவாவில் ஜனவரி 26 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு

கொரோனா பாதிப்பு எதிரொலியாக கோவாவில் வருகிற ஜனவரி 26ந்தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கொரோனா: கோவாவில் ஜனவரி 26 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு
Published on

பனாஜி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இவற்றில் டெல்லி, மராட்டியம் அதிக அளவிலான ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், கோவா மாநில அரசு பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, கோவாவில் வருகிற ஜனவரி 26ந்தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மூடும்படி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com