மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - மத்திய அரசு இன்று ஆலோசனை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - மத்திய அரசு இன்று ஆலோசனை
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா நேற்று 5 ஆயிரத்தை கடந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

மாநிலங்கள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com