ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.100 குறைப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.100 குறைப்பு.
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.100 குறைப்பு
Published on

ராஞ்சி,

நாட்டின் பிற மாநிலங்களைப் போல ஜார்கண்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் வரை மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 939 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர்., ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கட்டணங்களில் தலா ரூ.100-ஐ மாநில அரசு குறைத்துள்ளது.

இதனால் ஜார்கண்டில் இனிமேல் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டணம் ரூ.300 ஆகவும், ரேபிட் ஆன்டிஜென் சோதனை கட்டணம் ரூ.50 ஆகவும் இருக்கும். பரிசோதனை பொருட்களின் விலை குறைந்ததால் இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com