தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா; மரபணு பரிசோதனை நடத்த முடிவு

தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா; மரபணு பரிசோதனை நடத்த முடிவு
Published on

மும்பை,

தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்தின் தோம்பிவிலி நகருக்கு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை கல்யாண் தோம்பிவிலி மாநகராடசி உறுதி செய்து உள்ளது.

அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதில் அந்த நபருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். அவருடைய குடும்பத்தினரின் பிற நபர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைகள் சேகரிக்கப்பட உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com