

புதுடெல்லி,
இந்தியாவின் சீரம் நிறுவனம் தற்பேது அதிக அளவில் கெரேனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இன்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து காபூல் சென்றடைந்தது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும் தனது டுவிட்டரில், எப்பொழுதும் நண்பர்களுடன் துணை நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.