நிரவ் மோடியின் ரூ.500 கோடி சொத்துக்களை கைப்பற்ற கோர்ட் அனுமதி

நிரவ் மோடியின் ரூ. 500 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
நிரவ் மோடியின் ரூ.500 கோடி சொத்துக்களை கைப்பற்ற கோர்ட் அனுமதி
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நிரவ் மோடியின் 39 சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த 39 சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com