கொரோனா தொற்று அதிகரிப்பு: தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
 கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்து இருந்தனர். தமிழகத்திலும் நேற்று 534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கேரளா, மகராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கெரேனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை அறிவுரைகளுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மெத்தம் 8 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு ராஜேஷ் பூஷன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com