கர்நாடகாவில் இன்று மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று: 13 பேர் பலி

கர்நாடகாவில் இன்று 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று: 13 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,95,284 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,880 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 8,58,370 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 25,015 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com