

எர்ணாகுளம்,
கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"கேரளாவில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 3 பேருக்கு தொடர்பு மூலம் தொற்று பரவியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது என்றார்.