

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை 68,26,898 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் மந்தீப் பண்டாரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (புதன்கிழமை) மட்டும் மாலை 6 மணி வரை 2,15,133 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 68,26,898 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 56,65,172 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 11,61,726 பேர் முன்களப் பணியாளர்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.