

97 லட்சத்து 79 ஆயிரத்து 304 சுகாதார பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 67 லட்சத்து 18 ஆயிரத்து 723 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 50 லட்சத்து 79 ஆயிரத்து 964 பேர் முதல் டோசும், 83 லட்சத்து 55 ஆயிரத்து 982 பேர் 2-வது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர். 18-44 வயது பிரிவினர் 1 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
45-60 வயது பிரிவினர் 6 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 484 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 99 லட்சத்து 15 ஆயிரத்து 278 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 69 லட்சத்து 15 ஆயிரத்து 863 பேர் முதல் டோசும், 1 கோடியே 83 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் இரண்டாவது டோசும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.