45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் -மத்திய அரசு

ஏப்ரல் 1ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
படம்: ANI
படம்: ANI
Published on

புதுடெல்லி

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் (40,715) இந்த மாநிலங்களில் மட்டும் 80.90 சதவீதம் பதிவாகியுள்ளது.

மராட்டியம் ,பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கார், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 24,645 பேரும், பஞ்சாபில் 2,299 பேரும், குஜராத்தில் 1,640 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் 40,715 இந்த மாநிலங்களில் மட்டும் 80.90% பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது 3,45,377 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,81,253 ஆக (95.67%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29,785 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 7,84,612 முகாம்களில் 4,84,94,594 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று வரை நான்கு கோடிக்கும் அதிகமானோருக்கு (4,06,31,153) செலுத்தப்பட்டுள்ளது.

78,59,579 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 49,59,964 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 82,42,127 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 29,03,030 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 42,98,310 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,02,31,137 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி வழங்கும் வேகத்தை விரைவுபடுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதால், இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடலாம் என்று இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யபட்டு உள்ளது.

தடுப்பூசிக்கு இணை நோயுற்ற நிலைமைகளை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது விஞ்ஞானிகள் மற்றும் உலக விஞ்ஞானிகள் அமைப்புகளின் ஆலோசனையின்படி, 2 வது அளவை 4 வது மற்றும் 8 வது வாரத்தில் நிர்வகிக்கலாம், குறிப்பாக கோவிட்ஷீல்டுக்கு. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம், அது அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான கேடயத்தை வழங்கும்.

ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com