'புஷ்பா 2' பார்க்க வந்து போலீசிடம் சிக்கிய குற்றவாளி

போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Criminal caught by police after coming to watch 'Pushpa 2'
Published on

நாக்பூர்,

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் தொடர்ச்சியாக தற்போது 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்த்துக்கொண்டிருந்த விஷால் மேஷ்ரம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஷால் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இவர் தியேட்டருக்கு வருவதை தெரிந்துகொண்ட போலீசார் அவரின் காரை பஞ்சராக்கி விட்டு, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது கைது செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com