டானா புயல்: கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிப்பு

வங்கக் கடலில் டானா புயல் உருவாகியுள்ளது.
டானா புயல்: கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிப்பு
Published on

சென்னை,

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது . இந்த புயலுக்கு 'டானா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

டானா புயல் வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே நாளை இரவோ அல்லது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலையோ கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை (24-ம் தேதி) மாலை 6 மணி முதல் மறுநாள் (25-ம் தேதி) இரவு 9 மணி வரை 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com