கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு; பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த மத்தியக் குழு

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு நேரிட்டுள்ளது என ஆய்வு செய்த மத்தியக் குழு தெரிவித்துள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு; பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த மத்தியக் குழு
Published on

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கஜா புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. கஜா புயல் பாதிப்பால் 45 லட்சம் தென்னை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும், முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது. மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டது. மூன்று நாட்கள் ஆய்வு செய்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இன்று ஆலோசனையை மேற்கொண்டது. முதல்வருடனான ஆலோசனைக்குப்பின் மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு நேரிட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூ, நாகை மாவட்டங்களில் ஆய்வினை மேற்கொண்டோம். புயல் காரணமாக மக்கள் பெரும் இன்னலை எதிர்க்கொண்டுள்ளனர். தென்னை, பலா, வாழை என மரங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளது. விவசாயிகளை போன்று மீனவர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர். படகுகள், வீடுகள் தேசம் அடைந்துள்ளது. அவர்களுடைய வலியை நேரில் அறிந்தோம். டெல்டா மாவட்டங்கள் புயலினால் கடுமையான பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் பணிகள் சிறப்பாகவும், பாராட்டத்தக்கதாகவும் உள்ளது. புயலுக்கு முன்னதாக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் டேனியல் ரிச்சர்ட். பாதிப்பு தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com