ஐ.ஐ.டி. டெல்லி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த எலி!

ஐ.ஐ.டி. டெல்லியில் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த எலி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.ஐ.டி. டெல்லி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த எலி!
Published on

புதுடெல்லி,

மாணவர்களுக்கு காலை வழங்கப்பட்ட உணவில் இறந்த எலி கிடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை நிர்வாகம் நியமனம் செய்து உள்ளது.

அராவாலி விடுதியில் செவ்வாய் கிழமை காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் இறந்த எலி கிடந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர், இதனையடுத்தே விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி ஐ.ஐ.டி.க்கு 11 மாணவர் விடுதிகளும், மூன்று மாணவியர் விடுதிகளும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com