

குருஷேத்ரா,
அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் படிக்காதவர்கள் அல்ல. நன்கு படித்த பட்டதாரிகளும், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களுமே பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்கள் வயது குறைந்தவர்களாக உள்ளனர். அதனால் வாழ்வில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.
அந்த ஆர்வத்தை வைத்து இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்புக்களில் இணைத்து விடுகின்றனர். படித்தவர்கள் என்பதால் தான் அவர்கள் கொல்லும் மக்களின் அளவும் மாறுபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.