டெல்லி பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்- போலீசார் கைது

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து டெல்லி பாஜக அலுவலகம் முன்பாக ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
டெல்லி பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்- போலீசார் கைது
Published on

புதுடெல்லி,

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்தது. மணிஷ் சிசோடியாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

மணிஷ் சிசோடியா விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com