டெல்லி கட்டிட விபத்து: பிரதமர் மோடி வேதனை

விபத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

டெல்லி கட்டிட விபத்து: பிரதமர் மோடி வேதனை
Published on

புதுடெல்லி,

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.“சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.சத்ய நிகேதன் பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடம் மாணவர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்தது. விபத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரும் சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com