

புதுடெல்லி,
டெல்லியில் என்பிஆர் அமல்படுத்தப்படாது என்றும், என்பிஆர், என்.ஆர்.சி.யை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
என்பிஆர்-க்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.