டெல்லி மாநகராட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
டெல்லி மாநகராட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5.30 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பல இடங்களில் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளை சுற்றி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com