வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்டு

காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்டு
Published on

புதுடெல்லி,

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com