வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்திப்பு

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்திப்பு
Published on

புதுடெல்லி,

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்சேவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அதிபராக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார்.

3 நாள் பயணமாக வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கை அதிபர் கோத்தப ராஜபக்சே இன்று சந்தித்து பேசினார். தலைநகர் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com