தேர்தல் நடத்தை விதிமீறல்.. டெல்லியில் இதுவரை 774 வழக்குகள் பதிவு

கலால் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 24,081 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல்.. டெல்லியில் இதுவரை 774 வழக்குகள் பதிவு
Published on

புதுடெல்லி:

டெல்லியில் சட்டசபை தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எல்லை சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த 7-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று வரை (ஜனவரி 27) 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலால் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 24,081 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 374 சட்டவிரோத துப்பாக்கிகள், 452 கேட்ரிட்ஜ்கள் கைப்பற்றப்பட்டன. ரூ.12 கோடி மதிப்புள்ள 68,636 லிட்டர் மதுபானம், ரூ.72 கோடி மதிப்புள்ள 158.126 கிலோ போதைப்பொருள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.7.60 கோடி ரொக்கப்பணம், 37.309 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com