திருப்பதியில் குவிந்த பக்தர்கள் : 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் குவிந்த பக்தர்கள் : 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி தொடர் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வருவதால், அலிபிரி சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன.

நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியுள்ள நிலையில், அதற்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 78,733 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான டீ, காபி, பால், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com