நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தான் என்பதற்கு ஆதாரம் கேட்டோமா? - ராகுல்காந்தி மீது அசாம் முதல்-மந்திரி கடும் விமர்சனம்

ராகுல்காந்தி பாகிஸ்தான் மீது இந்தியா நிகழ்த்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார் என்று அசாம் முதல்-முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தான் என்பதற்கு ஆதாரம் கேட்டோமா? - ராகுல்காந்தி மீது அசாம் முதல்-மந்திரி கடும் விமர்சனம்
Published on

டேராடூன்,

70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று உத்தரகாண்ட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com