காலாவதியாகும் பிரதமருடன் பேச நான் விரும்பவில்லை; மம்தா பானர்ஜி பதிலடி

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு காலாவதியாகும் பிரதமருடன் பேச நான் விரும்பவில்லை என மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். #LokSabhaElections2019
காலாவதியாகும் பிரதமருடன் பேச நான் விரும்பவில்லை; மம்தா பானர்ஜி பதிலடி
Published on

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் தம்லுக் பகுதியில் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது:-

சகோதரி மம்தா மிகவும் விரக்தியடைந்துள்ளார். கடவுள் பற்றி பேச அல்லது கேட்க கூட விரும்பவில்லை. 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கமிடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார் சகோதரி மம்தா. பானி புயலை வைத்து கூட மம்தா பானர்ஜி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார். நான் சகோதரி மம்தாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் அகங்காரத்துடன் என்னிடம் பேச மறுப்பு தெரிவித்தார் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி இருந்தார்.

இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:-

பானி புயல் குறித்து பிரதமர் எனக்கு பேசியபோது நான் காரக்பூரில் ஒரு பிரசாரத்தில் இருந்தேன். அதனால் தான் நான் போனை எடுக்க முடியவில்லை என விளக்கினார். தேர்தல் முடிந்தவுடன் காலாவதியாகும் பிரதமருடன் நான் பேச விரும்பவில்லை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com