

புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று ‛மன் கி பாத்' நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
டெல்லியில் நடந்த 'AI IMPACT' உச்சி மாநாடு, உலக நாடுகள் ஏஐ-ஐ பயன்படுத்துவதில் ஒரு திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.
ஏஐ மூலம் மரபுகள், வேதங்களைப் பாதுகாத்து அவற்றை வருங்கால சந்ததிக்காக மாற்றியமைக்கும் செயலி மற்றும் கால் நடைகளை பராமரிக்க உதவும் ஏஐ செயலி ஆகியவை உலக தலைவர்களை பிரமிக்க வைத்தது.
தொடர்ந்து "டிஜிட்டல் அரஸ்ட் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வயதானவர்கள் அதிகமாக குறி வைக்கப்படுகிறார்கள். வங்கிகளை தொடர்பு கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள் என்றார்.