ஒடிசாவில் சக்தி வாய்ந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

ஒடிசாவில் சக்தி வாய்ந்த 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஒடிசாவில் சக்தி வாய்ந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
Published on

மால்கன்கிரி,

ஒடிசாவின் மால்கன்கிரி மாவட்டத்தில் மண்டப்பள்ளி பகுதியில், எல்லை பாதுகாப்பு படை போலீசார் (பி.எஸ்.எப்.) நடத்திய சோதனையில் சக்தி வாய்ந்த 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து அவற்றை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்ற போலீசார் அதன்பின் 3 வெடிகுண்டுகளையும் செயலிழக்க செய்தனர். இதனால் பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

இந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்டு அமைப்பினர் வைத்திருக்க வேண்டும் என பி.எஸ்.எப். வீரர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com