ரெயிலின் படிக்கட்டில் யார் அமர்வது என்பதில் தகராறு.. ஓடும் ரெயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்

​​ரெயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பாக ஜதினுக்கும், கஜேந்திரா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரெயிலின் படிக்கட்டில் யார் அமர்வது என்பதில் தகராறு.. ஓடும் ரெயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்
Published on

மதுரா,

ரெயிலின் படிக்கட்டில் யார் அமர்வது என்பதில் ஏற்பட்ட தகராறில் ஓடும் ரெயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த ஜதின் என்பவர், ஹத்ராஸ் ரெயில் நிலையத்தில் காஸ்கஞ்ச்-மதுரா பயணிகள் ரெயிலில் ஏறி தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

வாக்குவாதம்

இந்த வாக்குவாதத்தின்போது, ​​ஜதினை கொல்லும் நோக்கத்துடன் கஜேந்திரா அவரை தள்ளிவிட்டதாகவும், இதனால் அவர் ஓடும் ரெயிலிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

X

Daily Thanthi
www.dailythanthi.com