கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு பிரிவு உபசார விழா

கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடந்தது.
கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு பிரிவு உபசார விழா
Published on

பெங்களூரு:

கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விடை பெற்று செல்லும் தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, ரவிக்குமார் ஆற்றிய சேவையை பாராட்டினார்.

மேலும் அவருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். மேலும் புதிய தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை வரவேற்று அவருக்கு சால்வை அணிவித்தார். இதில் மந்திரிகள் ஆர்.அசோக், அஸ்வத் நாராயண், ஸ்ரீராமுலு, சோமண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com