விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் - சுப்ரீம் கோர்ட்டு

விவாகரத்துக்கு பிறகு, இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் - சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

சமீபத்தில் தெலுங்கானா ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சமாக மாதம் ரூ10,000 வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அந்த பெண்ணுக்கு கணவரிடம் ஜீவனாம்சம் பெற முழு உரிமை உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.

ஜீவனாம்சம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com