கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? புதிய விதியை கொண்டு வந்த ஆர்.பி.ஐ

புதிய விதிகளின் படி கிரெடிட் கார்டு பில் செலுத்தத் தவறுபவர்களுக்கு, கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா? புதிய விதியை கொண்டு வந்த ஆர்.பி.ஐ
Published on

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின் படி கிரெடிட் கார்டு பில் செலுத்தத் தவறுபவர்களுக்கு, கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். இதன்மூலம் கடைசித் தேதி முடிந்தும் 3 நாட்கள் வரை அபராதம் இன்றி பணம் செலுத்த அவகாசம் அளிக்கப்படும். இடைப்பட்ட காலக்கட்டத்தில் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படாது. இந்த புதிய சலுகை ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களையும் கடந்து தாமதம் செய்யும்போது மட்டுமே உங்கள் கடன் வரலாறு எதிர்மறையாகப் பாதிக்கப்படும். சிபில் ஸ்கோர் குறைந்தால், எதிர்காலத்தில் வீடு அல்லது வாகனக் கடன் பெறுவது கடினமாகிவிடும். எனவே, தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது எதிர்பாராத பண நெருக்கடியோ ஏற்படும் சூழலில், இந்த 3 நாள் அவகாசம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com