

புதுடெல்லி,
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. இந்தியாவும் இங்கு படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசும்பொழுது, டோக்லாம் பீடபூமி பகுதியில் நிலைமையை கைப்பற்றும் சீனாவின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிரிக்க கூடும் என நான் கருதுகிறேன் என கூறினார்.
இந்த பகுதியினை பற்றிய விவாதம் மற்றும் எல்லையை கைப்பற்றுவதில் உள்ள போட்டி தொடர்ந்து இருக்கும். உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு ஒழுங்குமுறை பற்றிய வேறுபட்ட கருத்துகள் உள்ள நிலையில் இந்த நிலைமையே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.