நவலகுந்து தாலுகாவில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி

நவலகுந்து தாலுகாவில் சம்பவம் இரண்டுகள் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி
நவலகுந்து தாலுகாவில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி
Published on

உப்பள்ளி;

கதக் மாவட்டம் நரகுந்து பகுதியை சேர்ந்தவர் சிவானந்தா (வயது 40). இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் உப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் சென்றார். லாரியை சிவானந்தா ஓட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா யமனூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி இவர்கள் சென்ற மினிலாரி மீது மோதியது. இந்த விபத்தில் சிவானந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரமேஷ் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நவலகுந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com