கடன்தொல்லையால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தார்வாரில் கடன்தொல்லையால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கடன்தொல்லையால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
Published on

உப்பள்ளி-

தார்வார் (மாவட்டம்) தாலுகா உப்பினபெடகேரி அருகே உள்ள ஜைபனகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா குரகுந்த் (வயது55). இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில், கல்லப்பா விவசாயம் செய்து வருகிறார். இதற்காக அவர் வங்கி மற்றும் நண்பர்களிடம் ரூ.7 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடன் கொடுத்தவர்கள் கல்லப்பாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். ஆனால் அவரிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை.

இதனால், கல்லப்பா கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்றுகாலை ஜைபன கொப்பா கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள்

இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கல்லப்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com