தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின் போது திடீரென வீசிய பலத்த காற்றில் மொத்தமாக சரிந்த மேடை!

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மொத்தமாக சரிந்த மேடையால் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின் போது திடீரென வீசிய பலத்த காற்றில் மொத்தமாக சரிந்த மேடை!
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியின் பொதுக்கூட்டத்தில் அம்மாநில முன்னாள் மந்திரி நிம்மகாயல சின்னராஜப்பா பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை மளமளவென சரிந்தது. மேடை சரிந்ததில் மேடையில் இருந்த தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. மாகந்தி பாபு காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com