

சென்னை,
சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்க கடலின் வடகிழக்கே 600 கி.மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.9 ஆக நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடலுக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.