இமாச்சல் பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்

காலை 10.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்
Published on

சிம்லா,

இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 10.44 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 32.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.37 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com