ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு


ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
x

ஜம்மு காஷ்மீரில் இன்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி) அதிகாலை 2:47 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.18 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

1 More update

Next Story