மணிப்பூரில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு


மணிப்பூரில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
x

இந்த நிலநடுக்கம் மாலை 6.59 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்பால்,

மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 6.59 மணியளவில் ரிக்டர் அளவில் 3.2 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.36 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.12 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

1 More update

Next Story