ஒடிசாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

மணிப்பூரிலும் நேற்று ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒடிசாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

ஒடிசாவின் கோராபுட் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.31 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 18.573 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 82.559 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

இதனையடுத்து, மணிப்பூரில் நேற்று இரவு 11.34 மணியளவில் (3 நிமிட இடைவெளியில்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com