உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்டின் சாமோலி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 10.27 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.19 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com