உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று காலை ரிக்டரில் 4.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
Published on

பித்தோராகார்,

உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டம் அருகே இன்று காலை 9.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி இருக்கிறது.

இந்நிலநடுக்கம் பித்தோராகாரில் இருந்து 48 கி.மீ. வடகிழக்கே உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 5-ந்தேதி உத்தரகாண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் ரிக்டரில் 3.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அது அதிகாலை 3.49 மணியளவில் உணரப்பட்டது. நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com