மணிப்பூர், அசாமில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

மணிப்பூர் மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர், அசாமில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.21 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.26 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.30 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

அசாமின் ஹைலகண்டி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 3.19 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 29 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

ஒரே நாளில் மணிப்பூர் மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com