வங்கக்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா
வங்கக்கடலில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.12 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.95 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.41 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கக்கடலில் இரண்டாவது முறையாக 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 3.32 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story