டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தியது.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் புதிய மதுபான கெள்கை ஊழல் தெடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தியது. விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார் ஆஜராகினார். அவரது வாக்குமூலத்தை பணமேசடி தடுப்புச் சட்டத்தின் விதிகள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசேடியா, பிபவ் குமார் உள்ளிட்ட 36 பேர் மீது ரூ.1000 கேடி பணமோசடி தெடர்பான ஆதாரங்களை அழிக்க 170 செல்பேசி அழைப்புகள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தெடர்பாக பிபவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுகிறது" என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com