

புதுடெல்லி,
மத்திய அரசின், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 2 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரத்து 485 பேர் இணைந்து உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 10 லட்சத்து 51 ஆயிரத்து 769 பேர் இணைந்தனர். அதேபோல், தேசிய தொழிலாளார் காப்பீட்டு திட்டத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை 2 கோடியே 72 லட்சத்து 46 ஆயிரத்து 838 பேர் இணைந்து உள்ளனர். இதில், இந்த மாதம் மட்டும் 12 லட்சத்து 19 ஆயிரத்து 501 தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பாக இணைந்து உள்ளனர்.
மேலும், இந்த மாதத்தில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 67 ஆயிரத்து 62 பேர் இணைந்தனர். அதில், 6 ஆயிரத்து 698 பேர் மத்திய அரசு ஊழியர்களும், 47 ஆயிரத்து 352 பேர் மாநில அரசு ஊழியர்களும் மற்றும் 13 ஆயிரத்து 12 பேர் அரசுத்துறையை சாராதவர்களும் அடங்குவர்.
மேற்கண்ட தகவலை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.